இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR முறையில் பெட்ரோல் விநியோகம்
இன்று சனிக்கிழமை (18) நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் தொடங்கப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு நடைமுறையில் இருந்தபோல், பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் QR முறைமை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் ‘ஒற்றை - இரட்டை’ இலக்க முறையின் அடிப்படையில், அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையின் மூலம் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
