எண்ணெய் குளியலால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலின் வாத, பித்த, கபம் தோடங்கள் சீராகிறது. உடலின் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகி உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.

எண்ணெய் குளியல் எனபது செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை, லேசாக சூடாக்கி உச்சந்தலை, உள்ளங்கை, உள்ளங்கால், தொப்புள், தொப்புளுக்கு பின்புறம் என தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து குளிப்பது எண்ணெய் குளியல் என்று அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கியதா சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடலின் வாத, பித்த, கபம் தோடங்கள் சீராகிறது. உடலின் உள் உறுப்புகளின் இயக்கம் சீராகி உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது.
லிம்ஃபாட்டிக்ஸ் எனப்படும் நிணநீர்க் கோளமே உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஊட்டம் அளிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சருமத்தின் வழியாக எண்ணெய் உட்கிரகிக்கப்பட்டு, இந்த நிணநீர்க் கோளத்தை அடைந்து உடலுக்கு எல்லாவிதமான நன்மையையும் அளிக்கிறது.
வாரம் ஒன்று அல்லது இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலின் செல்கள் வெப்பம் அடைவதில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
வெப்பத்தினால் செல்கள் விரிவடைந்து நீர்சத்து வற்றி பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. இதனை தவிர்க்க வாரம் இரு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.
எந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்??
நல்லெண்ணெய்
விளக்கெண்ணெய்,
பசு நெய்
ஆகிய மூன்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. அனைவருக்கும் ஏற்றது நல்லெண்ணெய். எண்ணெய் முழுக்க செய்த பின் இள வெந்நீரில் குளிக்க வேண்டும். அன்று போதுமான நீர் அருந்த வேண்டும்.
வெளியில் அலைவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக அன்று ஓய்வு எடுக்க வேண்டும். சரும துவாரங்களில் ஊடுருவி அடைப்பை உண்டாக்கிய அழுக்கை வெளியேற்றும் தன்மை எண்ணெய் குளியலுக்கு மட்டும் தான் உண்டு.
வளரும் பருவம் முதல் சரியான முறையில் தவறாமல் தலைக்கு எண்ணெய் வைப்பது, எண்ணெய் குளியல் மேற்கொண்டால் பல்வேறு உடல் , எலும்பு மற்றும் தோல் நோய் பிரச்னை வராமல் தடுக்கலாம். காதுகளில் மருத்துவரின் ஆலோசனையின்றி எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.
காது ஜவ்வில் ஓட்டை உள்ளவர்கள் எண்ணெய் ஊற்றுவதால் ஒவ்வாமை ஏற்பட்டு தீராத காது பிரச்னைக்கு ஏற்பட வாய்ப்பாக அமையும்.
எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி தான் காதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். சித்த மருத்துவத்தில் எண்ணெய் ஊற்றுவதை விட காது மடலில் எண்ணெயை தடவி நீவி விடுவதால் காது பிரச்னைகளில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம்.
காதில் விட பயன்படும் தைலங்கள்:
காதில் விடுவதற்காக சிரரோக நிவாரணத்தைலம், சுக்குத் தைலம் நல்லெண்ணெய் போன்றவையும் மற்றும் பலவும் சித்த மருந்து கடைகளில் கிடைக்கிறது. மருத்துவரின் பரிந்துரையின்பேரில் வாங்கி பயன்படுத்தலாம்
பிறந்த 15 நாட்கள் ஆன குழந்தை முதல் அனைவருக்குமே எண்ணெய் குளியல் ஏற்றது. கர்ப்பிணிகள், தீவிர நோயாளிகள், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் நோயாளிகள், உடலில் அதிக வலி கொண்டவர்கள், கபம் தொடர்பான நோய் கொண்டவர்கள், அஸ்துமா நோயர்கள், அறுசைசிகிச்சைகள் செய்தவர்கள், காய்ச்சல் நேரங்களில் எண்ணெய் குளியலை தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு தேவையெனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
எண்ணெய் குளியல், உடல் வெப்பத்தை தணிக்கும், சருமம் (தோல்) வறண்டு போகாமல் மென்மையாக இருக்கும், தொடர்ந்து குளித்து வரும்போது உடல் சோர்வு, உடல் அசதி உடல் வலி நீங்கும், நல்ல உறக்கத்தை உண்டாக்கும், கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுவதால் கண் பார்வை மிகவும் நன்றாக இருக்கும்.
உடல் வெப்பத்தால் மலக்கட்டு, மூல நோய்கள் வராமல் தடுக்கும், உடல் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி நீங்கும், பெண்களுக்கு வெள்ளை படுதல் ஏற்படாது, கண் பொங்காது, ஞாபகமறதி ஏற்படாது, காலில் வெரிகோஷ்வெயின் ஏற்படாது, பேன் ஈறு பொடுகு ஏற்படாது, நரைமுடி வராது, கண்புரை நோய் ஏற்படாது
எண்ணெய் தேய்க்கும் வழிமுறை
எண்ணெய் தேய்த்து 15 நிமிடம் முதல் 60 நிமிடத்திற்குள் குளித்து விட வேண்டும்.
மிதமான வெந்நீரைப் பயன்படுத்திதான் குளிக்க வேண்டும்.
ஷாம்பு தவிர்த்து சீயக்காய்தூளையே பயன்படுத்தவேண்டும்
குளித்த பின் குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உடற்சூட்டை சமனப்படுத்தக்கூடிய நாட்டுக்கோழி ரசம், கொள்ளுரசம், மிளகு ரசம், பருப்பு துவையல் பயன்படுத்தலாம். பொதுவாக, புதன் மற்றும் சனிக்கிழமைகள் எண்ணெய் குளியல் நல்லது.