அரச தொழிலுக்கு காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

நவம்பர் 27, 2023 - 17:47
அரச தொழிலுக்கு காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

அடுத்த வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம சேவகர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனை தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாடசாலை மாணவிகள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை

2021ஆம் ஆண்டு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதியான பரீட்சாத்திகளுக்காக கிராம அலுவலர் பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த பரீட்சையில் சித்திபெறும்  2,238 பேர் கிராம சேவகர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!