வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், யாழ். சிறையில் உயிரிழப்பு!

அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், யாழ். சிறையில் உயிரிழப்பு!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தனது உயிரை மாய்த்துள்ளார். 

அவர் இன்று (25) காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த குற்றவாளிகளுக்கு யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு, கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். அந்த தீர்ப்பை ஆராய்ந்த கொழும்பு நீதிமன்றம் யாழ். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

அதன்பின்னர் அந்த தீர்ப்பு வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதன்படி, நேற்றையதினம் அவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டனர். இந்நிலையில், குறித்த கைதி இன்று அதிகாலை தனது உயிரை மாய்த்துள்ளார். 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த மரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -