விழுந்த பற்களை மீண்டும் முளைக்க வைக்கும் மருந்து - ஜப்பானில் மனித மருத்துவப் பரிசோதனை தொடக்கம்

விழுந்த பற்களை இயற்கையாக மீண்டும் முளைக்க வைக்கும் ‘TRG-035’ மருந்தின் முதல் கட்ட மனித மருத்துவப் பரிசோதனையை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

கூகுளில் கொழும்பு தமிழ் செய்திகளை பின்தொடரவும் Add as a preferred source on Google
விழுந்த பற்களை மீண்டும் முளைக்க வைக்கும் மருந்து - ஜப்பானில் மனித மருத்துவப் பரிசோதனை தொடக்கம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பல் மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில், விழுந்த பற்களை இயற்கையாகவே மீண்டும் முளைக்கச் செய்யும் ‘TRG-035’ என்ற புதிய மருந்தின் உலகின் முதலாவது மனித மருத்துவப் பரிசோதனையை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.

கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தீவிரப் பரிசோதனை வெற்றிகரமாக முடிகின்ற பட்சத்தில், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்த மருந்து உலக சந்தைக்கு விற்பனைக்கு வரும் எனப் பல் மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த மருந்து, இயற்கையாகவே பற்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ‘USAG-1’ எனும் புரதத்தை நடுநிலையாக்குகிறது. அதாவது, பல் வளர்ச்சியைத் தடுக்கும் “பிரேக்கை” விடுவிப்பதன் மூலம், உடலில் உள்ள ஒடுக்கப்பட்ட முளைப்புள்ளிகள் (dormant tooth buds) மீண்டும் செயல்பட்டு, புதிய பற்களை உருவாக்குகின்றன. இது நூற்றாண்டுகளாக நிலவி வரும் செயற்கைப் பற்கள் மற்றும் இம்ப்ளான்ட் சிகிச்சைகளுக்கு ஒரு புரட்சிகரமான மாற்றாக அமையும்.

‘TRG-035’ ஒரு மோனோக்ளோனல் ஆன்டிபாடி மருந்து ஆகும், இது நரம்பு வழியாக உட்குத்து மூலம் செலுத்தப்படுகிறது. நமது உடலில் வளர்ச்சி நின்றுபோன பற்களின் முளைப்புள்ளிகள் உள்ளன. ‘USAG-1’ எனும் புரதம் இவற்றைச் செயலற்ற நிலையில் வைத்திருக்கிறது. ‘TRG-035’ அந்த புரதத்தைத் தடுக்கும்போது, இந்த முளைப்புள்ளிகள் மீண்டும் செயல்பட்டு, புதிய, இயற்கையான பற்களை உருவாக்கத் தொடங்குகின்றன.

கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் கிடானோ மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் பரிசோதனை தொடங்கப்பட்டது. இது 11 மாத ஆய்வாகும். 30 முதல் 64 வயதுக்குட்பட்ட, குறைந்தது ஒரு பல்லாவது இல்லாத 30 ஆண்கள் இந்தப் பரிசோதனையில் பங்கேற்கின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முதற்கட்டமாக மருந்தின் பாதுகாப்பு மற்றும் சரியான அளவு ஆகியவற்றைச் சோதிப்பதே இதன் நோக்கம். இது வெற்றி பெற்றால், பிறவியிலேயே பற்கள் இல்லாத 2 முதல் 7 வயதுக்குட்பட்ட சிறார்களை மையமாகக் கொண்ட அடுத்த கட்ட ஆய்வு நடத்தப்படும். இருப்பினும், நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Click for more latest உலகம் news. Also get top headlines and latest news from Sri Lanka and around the world at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -