ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!
ஹோர்முஸ் நீரிணை அருகே கடற்படை கட்டுப்பாடுகளை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ஈரான் நாட்டைச் சேர்ந்த சரக்குக் கப்பலை அமெரிக்கா கடற்படை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தூஸ்கா’ என அழைக்கப்படும் அந்தக் கப்பல் ஓமன் வளைகுடா பகுதியில் பயணித்தபோது பலமுறை எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்து கப்பல் தொடர்ந்து முன்னேறியதால், அமெரிக்க கடற்படை நடவடிக்கை எடுத்து அதனை தடுத்து வைத்து கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தற்போது அந்தக் கப்பலில் உள்ள சரக்குகள் குறித்து விரிவான சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், அந்தக் கப்பல் ஈரானின் துறைமுகத்தை நோக்கி பயணித்ததாகவும், அங்கு செல்ல வேண்டாம் என சுமார் 6 மணி நேரம் முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
