“எதிரிகளை தவிர மற்ற கப்பல்களுக்கு ஹார்முஸ் திறப்பு” – ஈரான் அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணை விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஈரான் புதிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தியிருந்த ஈரான், தற்போது “எதிரி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களைத் தவிர மற்ற அனைத்து கப்பல்களுக்கும் நீரிணை திறந்தே உள்ளது” என தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல்சார் அமைப்பில் (IMO) ஈரான் தூதர் அலி மவுசவி கூறுகையில், “ஈரான் எப்போதும் ராஜதந்திரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், எங்கள்மீது நடைபெறும் தாக்குதல்களே தற்போதைய சூழ்நிலைக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுடன் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை மேற்கொண்டால், ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு, ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறக்க வேண்டும் என அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஹார்முஸ் நீரிணை உலகளவில் முக்கியமான எண்ணெய் கடத்தல் வழியாக இருப்பதால், இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
