சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 21 நாட்களில் 84 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.
அத்துடன், இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 3 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.