உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சை எழுத முடியும் என குறிப்பிட்டுள்ளார். 
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஊடகங்களுக்கு இன்று (02) கருத்து தெரிவித்த அவர் ஜனவரி 04ஆம் திகதி உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டின் 25 மாவட்டங்களில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு எவ்வித தடைகளும் இன்றி  வருவதை உறுதிப்படுத்த பேரிடர் முகாமைத்துவம், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாக  அவர் கூறினார்.

அத்துடன், பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சினையும் இல்லாமல் மாணவர்கள் பரீட்சை எழுத முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,298 பரீட்சை  நிலையங்களில் நடைபெறவுள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -