பாடசாலை விடுமுறை; அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி, மீண்டும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வித் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த காலப்பகுதியில் 2023ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நேற்று முதல் வற் வரி திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் எரிபொருள் விலை உயர்வடைந்துள்ளது.
இதனால், பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.