தந்தை கொடுத்த தண்டனையால் மனம் புண்பட்டு, மகள் எடுத்த திடீர் முடிவு

தந்தை அடித்ததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நவம்பர் 2, 2023 - 17:09
தந்தை கொடுத்த தண்டனையால் மனம் புண்பட்டு, மகள் எடுத்த திடீர் முடிவு

தந்தை அடித்ததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

வட்டகொட தோட்ட மேல் பிரிவில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், தந்தையின் தாக்குதலால் மனமுடைந்த சிறுமி  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!