இன்று பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

மேற்கு மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 2, 2025 - 10:26
இன்று பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (2) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!