நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை; அறிவிப்பு வெளியானது

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

ஏப்ரல் 15, 2024 - 10:50
நாட்டின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை; அறிவிப்பு வெளியானது

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி மேல், சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் இன்று மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!