கடலில் குளித்த வெளிநாட்டு பெண் நீரில் மூழ்கி மரணம்

உயிரிழந்தவர் 37 வயதுடைய தென்கொரிய பெண் ஆவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

ஜுலை 14, 2024 - 22:42
கடலில் குளித்த வெளிநாட்டு பெண் நீரில் மூழ்கி மரணம்

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் குளித்த வெளிநாட்டு பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 
இந்த விபத்து நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அலையினால் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை கரையோரப் பாதுகாப்புப் படையினரும், உயிர்காப்புப் படையினரும் கரைக்குக் கொண்டு வந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 37 வயதுடைய தென்கொரிய பெண் ஆவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!