பல பகுதிகளில் இன்று மாலை நேரத்தில் மழை பெய்யும்

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

ஏப்ரல் 20, 2024 - 11:31
பல பகுதிகளில் இன்று மாலை நேரத்தில் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, வடமேற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அநுராதபுரம், வவுனியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களின் ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!