இரண்டு பஸ்கள் மோதி விபத்து: வைத்தியசாலையில் பலர் அனுமதி
இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருவளை பகுதியில் குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (03) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி – கொழும்பு சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் மற்றும் கொழும்பு – கதிர்காமம் நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் என்பன இவ்வாறு விபத்துக்குள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த 6 பேர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.