பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர்தான்... இணையத்தில் கசிந்த தகவல்!
பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் - விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன.

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர்
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் நுழைந்தார்.
அதன் பிறகு பூர்ணிமா ரவி, ரவீனா தஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா என 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி பிக்பாஸ் வீட்டில் வைல்கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர்கள் அர்சனா, தினேஷ், கானா பாடகர் பாலா, ஆர்.ஜே.பிராவோ, பட்டிமன்ற பேச்சாளரான அன்ன பாரதி என 5 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கடந்த 26-ம் தேதி பிக்பாஸ் வீட்டிலிருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் வைல்கார்ட் என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டனர்.
முதலாவதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து பவா செல்லதுரை தாமாக முன்வந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக கூறி வெளியே சென்றுவிட்டார்.
பின்னர் விஜய் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து அடுத்த வாரம் யுகேந்திரன் மற்றும் வினுஷா என வீட்டிலிருந்து இரண்டு பேர் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் 5-வது வாரம் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்த நிலையில் அன்ன பாரதி எவிக்ட் செய்யப்பட்டார்.
ஆறாவது வாரம் ஐஷூவும் 7-வது வாரம் கானா பாலாவும் 8-வது வாரம் ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்ஷயா என பிக்பாஸ் வீட்டிலிருந்து 2 பேர் எவிக்ட் செய்யப்பட்ட நிலையில் 9-வது வாரம் ஜோவிகா எவிக்ட் செய்யப்பட்டார்.
10-வது வாரம் மிக்ஜாங் புயல் கார்ணமாக ஓட்டிங் சரியாக நடிபெறவில்லை என்ற காரணத்தினால் நோ எவிக்ஷன் என்று பிக்பாஸ் குழு அறிவித்தது. இந்நிலையில் கடந்த 11-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பார்க்காத விதமாக மிட்வீக் எவிக்ஷன் நடைபெற்றது.
இதில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா வீட்டில் இருந்து வெளியேற்றப்பற்றார். அதனைத் தொடர்ந்து அந்த வார இறுதியில் கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதனை தொடர்ந்து கடந்த 12-வது வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து 13-வது வாரம் டபுள் எவிஷன் நடைபெற்ற நிலையில் ரவீனா மற்றும் நிக்சன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் கடந்த வாரம் நடைபெற்ற பணப்பெட்டி டாஸ்கில் பூர்ணிமா 16 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து விசித்திரா பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வார எவிக்ஷன் என்ற அடிப்படையில் ஞாயிறு அன்று வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து மிட் வீக் எவிக்ஷன் மூலம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் இறுதிப் போட்டியாளர்களாக விஷ்ணு விஜய், தினேஷ், மணி, அர்ச்சனா மற்றும் மாயா ஆகிய 5 பேர் உள்ளனர். இந்தப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஞாயிறு அன்று ஃபைனல்ஸ் நடைபெறுகிறது.
இந்நிலையில் அர்ச்சனா டைட்டில் வெற்றிபெறுவார் என்று இணையத்தில் தகவல் வைரலாகி வருகின்றது.