கனடாவுக்கு போலி கடவுச்சீட்டுடன் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது
போலியான கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் இலஙகை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் இலஙகை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் நேற்று(10) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 217 இல் தோஹா செல்வதற்காக அனுமதி பெற வந்தபோது, இளைஞனின் கடவுச்சீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால்அவர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கனடா செல்லும் மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
தொடர்ந்து, விசாரணையின் போது, அவரது இலங்கை கடவுச்சீட்டு மற்றும் மாலைதீவுக்கான போலியான விமான பயணச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர் விசாரணைகளின் போது, விமான நிலையத்திற்கு அருகாமையில் போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் ஒருவருக்கு 40 லட்சம் ரூபாய் செலுத்தி போலியான கனடா கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் பருத்திதுறையை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.