அதிகாலையில் பஸ் விபத்து - 22 பேர் காயம்
பஸ் மற்றும் கொள்கலன் என்பன நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் மற்றும் கொள்கலன் என்பன நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ், கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலனில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற அதேநேரம் பஸ்ஸின் பின்னால் வந்த எரிபொருள் பவுசரும் பஸ்ஸுடன் மோதியது.
விபத்தில் காயமடைந்த 22 பேரில் இருவர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 04 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கஜுகம பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.