குடும்ப தகராறில் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொன்ற கணவன் கைது!
வெலகெதர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகோட்டே பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 48 வயதுடைய பெண்ணொருவர் தனது கணவரால் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், சிகிச்சை பலனின்றி நேற்று (06) உயிரிழந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில், குடும்பத் தகராறின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் கணவரே இந்தக் கொலைச் சம்பவத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 50 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலகெதர பொலிஸார் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.