Honda வாகனங்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கை - Airbag தொடர்பில் உடனே Check செய்யுங்கள்!
இலங்கையில் Honda வாகனங்களைப் பயன்படுத்தும் உரிமையாளர்கள், தங்களது வாகனங்கள் தற்போது இடம்பெற்று வரும் SRS ஏர்பேக் (Airbag) சிஸ்டம் மேம்படுத்தல் மீளழைப்பு நடவடிக்கையால் தங்களது வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்குமாறு, அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு தொடர்பான மேம்படுத்தல் பணிகள், வாகன உரிமையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த மீளழைப்பு நடவடிக்கையில் Honda நிறுவனத்தின் பிரபலமான பல வாகன மொடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவற்றில்:
Honda Civic
Honda CR-V
Honda Accord
Honda Fit / Jazz
Honda City
Honda Insight
Honda Stream
Honda Odyssey
Honda Integra
Honda Crossroad
ஆகிய வாகனங்களின் தெரிவுசெய்யப்பட்ட மொடல் குறியீடுகள் ஆகும்.
வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் Chassis Numberஐ பயன்படுத்தி Honda Sri Lanka இன் பாதுகாப்பு மீளழைப்பு இணையதளத்தில் (Safety Recall Portal) வாகனம் இந்த நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேவையான Airbag System மேம்படுத்தலை மேற்கொள்ளத் தவறினால், விபத்தொன்றின் போது Airbag செயல்படும் சந்தர்ப்பத்தில் சாரதி அல்லது முன் இருக்கையில் பயணிக்கும் நபருக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் Honda வாகனங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motor Co. (Pvt) Ltd., இந்த பாதுகாப்பு மேம்படுத்தல் பணிகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த வாகனம் Stafford Motor Co. நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படாததாக இருந்தாலும் அல்லது இதற்கு முன்னர் அந்நிறுவனத்திடம் சேவை பெறாததாக இருந்தாலும், இந்த பாதுகாப்பு மேம்படுத்தல் இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, Honda வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் Chassis Numberஐ பயன்படுத்தி Recall நிலையை உடனடியாக பரிசோதித்து, தேவையெனில் பாதுகாப்பு மேம்படுத்தல் பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.