தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
கைது செய்வதற்காக தேடப்படும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான தகவலை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க இன்று ( 06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.
தென்னகோனைக் கண்டுபிடிக்கும் பணி குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் சி.ஐ.டி.க்குத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.