சிஐடிக்கு புதிய டிஐஜி நியமனம்
மேல் மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய காலத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
கனேமுல்ல சஞ்சீவ உட்பட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியாக ரொஹான் பிரேமரத்ன பணியாற்றியுள்ளார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?
News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.