மேர்வின் சில்வா கைது தொடர்பில் அவரின் மனைவி வெளியிட்டுள்ள தகவல்

இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விவரங்கள் தனக்கு தெரியாது.
மேர்வின் சில்வா கைது தொடர்பில் அவரின் மனைவி வெளியிட்டுள்ள தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

முன்னாள் அமைச்சர் மேர்வின்  சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்ட நிலையில்,  கைதுக்கான காரணம் தொடர்பில் இன்னும் தனக்கு தெளிவாகவில்லை என அவரின் மனைவி ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மேர்வின் சில்வா அமைச்சராக இருந்த காலப்பகுதியில் களனி பிரதேசத்தில் உள்ள அரச காணியொன்று, போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனினும், இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விவரங்கள் தனக்கு தெரியாது எனவும் மேர்வின் சில்வாவின் மனைவி தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்த போது, 4 பேர் அடையாள அட்டையை காட்டியதுடன், அவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -