வெளிநாடுகளில் இருந்து மரக்கறி இறக்குமதி; வெளியான தகவல்!

மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும்
வெளிநாடுகளில் இருந்து மரக்கறி இறக்குமதி; வெளியான தகவல்!

உள்நாட்டு சந்தையில் மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர