பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடையும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தின் ஊடாக கோரும் நடவடிக்கை இன்று(06) நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு 12.00 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவடையும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளில் இருந்து கோரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர