சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியாவதில் தாமதம்; வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் ஓரிரு வாரங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட கடுமையான முயற்சிகள் எடுத்து வருவதாக இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உயர்தர மாணவர்களுக்கு வரவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு
முன்னதாக, இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாக இருப்பதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால் பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.