பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு
மாத்தறை நீதிவான் நீதிமன்றம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது உத்தரவு ஒன்றை இன்று (22) பிறப்பித்துள்ளது.
சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் நிலம் வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலையாகாததால், நீதிபதி அவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நடத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
