சுவிட்சர்லாந்தில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த பஸ்: 6 பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த பஸ்: 6 பேர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பிரிபொங் மாகாணத்தில் உள்ள கெர்சர் நகரில் நேற்று மாலை ஒரு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மொத்தம் 11 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கெர்சர் நகரில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சில் திடீரென தீப்பற்றியது. சில நிமிடங்களில் தீ மளமளவென பரவி பஸ் முழுவதையும் சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசரமாக பஸ்சில் இருந்து வெளியேற முயன்றனர்.

இந்த விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் பஸ்சில் இருந்த மற்ற 6 பயணிகள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்த 5 பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பஸ்சில் தீப்பற்றியதற்கான காரணம் என்ன? இதில் ஏதேனும் சதிச்செயல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர