இன்று 12 மணிநேரம் நீர் விநியோகம் தடை

வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு இன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 21, 2023 - 12:28
இன்று 12 மணிநேரம் நீர் விநியோகம் தடை

வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு இன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன், வெலிக்கட முல்லை, கெரவலபிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலஹதுவா மற்றும் மருதானை வீதி ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

மேலும், ஹுனுபிட்டிய, வெடிகந்த, வெவெல்துவ, பிரஞ்சுவத்த, கிரிபத்கொட புதிய வீதி, பதிலியதுடுவ வீதி மற்றும் தலுபிட்டிய வீதியில் இருந்து அக்பர் டவுன் பாலம் வரை நீர் விநியோகம் தடைப்படும்.

களனி, பிரஞ்சுவத்த வீதி மற்றும் சரசவி மாவத்தையில் அவசர திருத்தப் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதிகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!