கொழும்பு- கண்டி வீதியை தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிப்பு

கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜனவரி 24, 2023 - 14:38
கொழும்பு- கண்டி வீதியை தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிப்பு

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு வார காலத்திற்கு ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை குறித்த பகுதியில் காபட் இடப்படவுள்ள பணிகள் காரணத்தினால் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகன சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!