அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை

குறித்த தண்டனைக் காலம் முடிந்து இன்று இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி 23, 2025 - 00:54
அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் மேலும் ஒருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

3.5 பில்லியன் ரூபாய் பெறுமதி வரி செலுத்தாமை குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் மற்றுமொருவருக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 4 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த தண்டனைக் காலம் முடிந்து இன்று இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!