சூட்கேஸில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: வெளியான பகீர் தகவல்

சீதுவ பகுதியில் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சூட்கேஸில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: வெளியான பகீர் தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சீதுவ பகுதியில் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர், சீதுவ, முக்கலங்கமுவ, பியசமராவைச் சேர்ந்த 79 வயதான கிரிளி சானித்ராணி என்ற பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் 20ஆம் திகதி அன்று சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தி, ஒரு அறையில் சூட்கேஸில் பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பராமரிப்புப் பணிக்காக வீட்டிற்கு வந்திருந்த 42 வயது நபர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இந்தக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பின்னர் சடலம் ஒரு சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நீர்கொழும்பு பதில் நீதிபதி இந்திகா சில்வாவும், அரச வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து முதற்கட்ட விசாரணைகளையும் நடத்தியுள்ளனர். இக்கொலை தொடர்பாக சீதுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -