கொழும்பில் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை (23) மாலை 6.00 மணி முதல் மறுதினம் (24) காலை 6.00 மணி வரை 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.