இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

காலி, மீட்டியாகொடை தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் கடந்த 03 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மே 8, 2025 - 15:11
இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது

காலி, மீட்டியாகொடை தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் கடந்த 03 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று பேர் மீட்டியாகொடை பொலிஸாரால் நேற்று முன்தினம் (06) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்டியாகொடை  மற்றும் கஹவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 27, 40 மற்றும் 44 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்ததாக கூறப்படும் மேலும் மூன்று சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!