மனைவியைக் கொலை செய்த கணவன் தற்கொலை
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சிக்குளம் பகுதியில் நேற்று (07) பதிவாகியுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆணும் 56 வயதுடைய பெண்ணும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கணவர் கொலை செய்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கோடாரி, குற்றம் நடந்த இடத்தில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.