வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அரசாங்கத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரசாங்கத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

எனினும், இதன் மூலம் சாதாரண வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அரச நிறுவனங்களின் அத்தியாவசியப் பணிகளுக்காக சில வாகனங்களை மாத்திரம் கொண்டு வருவதற்காகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சுக்கு 2 பஸ்கள், சுகாதார அமைச்சுக்கு 21 வண்டிகள், நடமாடும் மகப்பேறு கிளினிக்கிற்கு 3 வாகனங்கள், தொழிலாளர் அமைச்சுக்கு 1 வாகனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸுக்கு 3 பயணிகள் பஸ் என்பன மாத்திரமே இதன் மூலம் இறக்குமதி செய்யப்பவுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

வெளிநாட்டு உதவியின் அடிப்படையிலேயே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -