பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம்

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 29, 2023 - 15:24
மார்ச் 29, 2023 - 15:31
பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம்
மாதிரி படம்

காப்புறுதி நிறுவனம் ஒன்றின் பெண் ஊழியர்கள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்டு வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!