இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய தடை

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜுலை 1, 2023 - 10:40
ஜுலை 2, 2023 - 10:03
இலங்கையில் இன்று முதல் அமுலாகும் புதிய தடை

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் சேவை இன்று முதல் இரத்து செய்யப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்தத் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகள் போக்குவரத்துக்காக  வழங்கப்பட்ட அரை சொகுசு பஸ் சேவை அனுமதிப்பத்திரத்தை இன்றிலிருந்து வேறு சேவைக்காக மாற்றியமைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

இதேவேளை, பேருந்து கட்டண திருத்தத்தின் தேசிய கொள்கையின் பிரகாரம் இன்றைய தினம் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

எனினும் இந்த வருடம் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!