மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (15) மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளில், முக்கியமாக வரட்சியான வானிலை காணப்படும்.
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.