பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை
காலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய பிரதேசத்தில் 51 வயதுடைய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சுடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.