ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்ய திட்டம்

ஆண் குரங்களுக்கு மீண்டும் கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 17, 2024 - 12:36
ஜனவரி 17, 2024 - 12:37
ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்ய திட்டம்

மாத்தளை மாவட்டத்தில் ஆண் குரங்களுக்கு மீண்டும் கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு இதற்கான நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மாத்தளை மாவட்டத்தில் சனத்தொகை அதிகரிப்புடன் இப்பிரதேசத்தில் எழுந்துள்ள விவசாயப் பிரச்சினையாகக் கலந்துரையாடப்பட்டு, இலங்கையில் முதன் முதலாக ஆண் குரங்குகளுக்கு கருத்தடைத் திட்டத்தை முன்னோடித் திட்டமாக மேற்கொள்வதற்குப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!