அஸ்வெசும தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
அஸ்வெசும உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அஸ்வெசும உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், அஸ்வெசும உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போதைய நாட்களில், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தல் மற்றும் வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கும் பணிகள் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இரு மாத பணம் வங்கியில் வைப்பிலிடப்படும்; வெளியான அறிவிப்பு
இதற்கமைய, அஸ்வெசும உதவி கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்குமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் தகவல் பெறுவதற்காக எல்ல பிரதேச செயலகத்துக்கு சென்ற நபர் ஒருவர் வரிசையில் காத்திருந்த போது திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.