சாதாரணத் தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரணத் தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பொதுப் பரீட்சை பெறுபேறுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
“சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்தப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வழங்கத் தயாராக உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.
