இடையூறு ஏற்படாத வகையில் நாடளாவிய ரீதியில் தாதியர் போராட்டம்!
தாதியர் சேவையிலுள்ளவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாதியர் சேவையிலுள்ளவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில், தாதியர் சேவை கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27) அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய கூறியுள்ளார்.
அத்துடன், போராட்டத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.