முன்பள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடுவலை பகுதியில் பாடசாலையொன்றின் நிகழ்வொன்றில் உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 4, 2023 - 14:20
முன்பள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

முறையான பயிற்சிகளை நிறைவு செய்யாத ஆசிரியர்கள் முன்பள்ளிகளை ஆரம்பிக்க எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவலை பகுதியில் பாடசாலையொன்றின் நிகழ்வொன்றில் உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 19 ஆயிரம் முன்பள்ளிகள் உள்ளதுடன், அதில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர்.

இந்த அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் முறையான டிப்ளோமா பயிற்சி வழங்கப்படுவதுடன், எதிர்காலத்தில் முறையான சான்றிதழ்களின் அடிப்படையில் மாத்திரமே முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும்  என கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!