மீள்திருத்த பெறுபேறு விண்ணப்பம் பற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு
அக்டோபர் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பரீட்சை முடிவுகளின் மீள் கணக்கெடுப்புக்கான விண்ணப்பங்கள் கோருவது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் வினவ வேண்டுமாயின் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கலாம் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.