புலமைப்பரிசில் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 12, 2023 - 11:17
புலமைப்பரிசில் தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நேற்று (11) நள்ளிரவு நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை பரீட்சை 2,888 நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!