ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள்
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.
முதல் நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவிலும், 2 வது 4.8 ரிக்டர் ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கமானது 5 மற்றும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பீதியை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் சேதங்கள் தொடர்பில் உடனடி தகவல் இல்லை.