மகாவலி கங்கையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மார்ச் 2, 2023 - 15:04
மார்ச் 2, 2023 - 15:06
மகாவலி கங்கையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில்  மாவில்மடு பிரதேசத்தில் மகாவலி கங்கையில் இருந்து ஆணின் சடலம் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

45 - 55 வயதுக்கு இடைப்பட்ட நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதுடன்,  குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!